பெரம்பலூர் - Perambalur

பெரம்பலூரில் மனித தலை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி

பெரம்பலூரில் மனிதன் தலை உருவத்தில் பிறந்த ஆட்டுக்குட்டி சில நிமிடங்களில் இறந்துவிட்டது, வித்தியாசமான தோற்றத்துடன் பிறந்த குட்டியை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பெரம்பலூர் ஆலம்பாடி ரோடு அன்னை நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கடந்த 10 வருடங்களாக ஆடு மேய்த்து வளர்த்து வருகிறார். இவரது ஆடு ஒன்று நேற்று மாலை குட்டியை ஈன்றுள்ளது. அந்தக் குட்டியின் தலை மனித தலை போன்று இருந்தது.  இந்தத் தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியது, இதனை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பிறக்கும் போது உயிருடன் இருந்த குட்டி சுமார் 30 நிமிடங்களில் உயிரிழந்துவிட்டது. மேலும் அதிசயமாக பிறந்த குட்டி இறந்து விட்டதே என பெருமாள் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். மரபணு குறைபாடு காரணமாக இதுபோன்று வித்தியாசமான உருவத்தில் ஆட்டுக்குட்டி பிறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

வீடியோஸ்


பெரம்பலூர்