பெரம்பலூர்: பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் மருதமுத்து, பள்ளியின் தலைமையாசிரியர் மரகதம் , (ONE STOP CENTRE) Admin கீதா, மற்றும் (ONE STOP CENTRE) Case Worker ஷீபா, ஆகியோர்கள் இணைந்து பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடையே குழந்தை திருமணம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நடத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகளிடம் பேசிய உதவி ஆய்வாளர் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் பெண்குழந்தைகள் அதிகமாக செல்போன்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பல பிரச்சனைகளில் இருந்து விடபட பெண்குழந்தைகள் கடினமாக கல்விக்கு முக்கியத்துவம் அளித்து சமுதாயத்தில் அரசு அதிகாரிகளாக தகுதி பெற வேண்டும் என்றும் கூறினார்கள்.