பெரம்பலூர் - Perambalur

எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் எசனை ஊராட்சியில் உள்ளது காட்டு மாரியம்மன் கோவில், மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்து பெற்று விளங்கும் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம் அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை மாதத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி இன்று நடைபெற்றது, இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், தொடர்ந்து திரளான கிராம பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்று கிராம பகுதிகளான கீழக்கரை, பாப்பங்கரை, சோமண்டபுதூர், அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்
Apr 30, 2024, 11:04 IST/பெரம்பலூர்
பெரம்பலூர்

எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

Apr 30, 2024, 11:04 IST
எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் எசனை ஊராட்சியில் உள்ளது காட்டு மாரியம்மன் கோவில், மிகவும் பழமை வாய்ந்த, பிரசித்து பெற்று விளங்கும் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம் அதனை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை மாதத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான திரு தேரோட்டம் ஏப்ரல் 30ஆம் தேதி இன்று நடைபெற்றது, இதில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார், தொடர்ந்து திரளான கிராம பொது மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் சுற்று கிராம பகுதிகளான கீழக்கரை, பாப்பங்கரை, சோமண்டபுதூர், அனுக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.