தமிழின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தர்பார் படத்தின் தோல்விக்குப் பின் திரைப்படம் இயக்காமல் இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அவர் இயக்குவதாக இருந்த திரைப்படத்தின் பணிகளும் தொடர்ந்து தள்ளிப்போகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட ஆக்ஷன் திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.