உதவி பேராசிரியர் நியமனம் - போட்டி தேர்வு ஒத்திவைப்பு

56பார்த்தது
உதவி பேராசிரியர் நியமனம் - போட்டி தேர்வு ஒத்திவைப்பு
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு வருகிற ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக போட்டித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு, எழுத்துத் தேர்வு பாடங்களுக்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி