திருமணமாகாத விரக்தியில் பெற்றோரை கொல்ல முயன்ற மகன்

76பார்த்தது
திருமணமாகாத விரக்தியில் பெற்றோரை கொல்ல முயன்ற மகன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் - வத்சலா தம்பதிக்கு விமல் என்ற மகன் உள்ளார். 40 வயதான தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் அவர் பகீர் முடிவெடுத்தார். அதாவது தாய், தந்தைக்கு குளிர்பானத்தில் திராவகத்தை கலந்து கொடுத்ததோடு தானும் குடித்தார். வலி தாளாததால் 108 ஆம்புலன்சுக்கு விமல் தகவல் கொடுக்க, ஊழியர்கள் மூவரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி