மதுபோதையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! மருத்துவமனையில் பரபரப்பு

64பார்த்தது
மதுபோதையில் மருத்துவருக்கு கத்திக்குத்து! மருத்துவமனையில் பரபரப்பு
புதுச்சேரியை சேர்ந்த மகேஷ் விபத்தில் ஏற்பட்ட காயத்துக்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவரை காண தந்தை வினோத்குமார் (40) மது போதையில் சென்றதால் ஊழியர்களால் வெளியேற்றப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் மருத்துவர் நவீன் (28) என்பவரை கழுத்தில் குத்த படுகாயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து வினோத்குமார் கைது செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் போராட்டம் நடத்தியதால் நோயாளிகள் சிரமமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி