கோவில் கிடா வெட்டுக்குச் சென்ற 8 வயது சிறுமி உயிரிழப்பு

67பார்த்தது
கோவில் கிடா வெட்டுக்குச் சென்ற 8 வயது சிறுமி உயிரிழப்பு
சிவகங்கை: பிரான்மலை அருகே உள்ள காலடி பச்சேரியை கிராமத்தை சேர்ந்த ராஜ்குமாரின் மகள் வர்ஷா (8). இவர்கள் குடும்பத்துடன் திருப்புவனத்தில் அமைந்துள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவிலில் கிடா வெட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று (ஜுன் 2) வந்துள்ளனர். இந்நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக சிறுமி வர்ஷா கோவிலுக்கு வெளியே சென்ற போது இரும்பு மின் கம்பத்தை தாண்டிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் திருப்புவனம் காவல்துறையினர் சிறுமியின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி