பசு பாதுகாவலர்கள் கொலைகளை ஆதரிக்கும் வகையில் பேசிய அமித்ஷா

70பார்த்தது
பசு பாதுகாவலர்கள் கொலைகளை ஆதரிக்கும் வகையில் பேசிய அமித்ஷா
மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வந்தால், பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் என உறுதியளிக்கிறேன் என பீகாரில் தேர்தல் பரப்புரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். சீதையின் தேசமான இங்கு பசுவதை ஏற்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொலைகளை செய்யும் கும்பல்களை ஆதரிக்கும் வகையில் அமித் ஷா பேசியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.