விஷச் சாராய உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணை

63பார்த்தது
விஷச் சாராய உயிரிழப்பு: சிபிசிஐடி விசாரணை
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விஷச் சாராயம் குடித்து 33 பேர் உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த சிபிசிஐடி விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதியை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. இந்த விவகாரத்தில் சாராய வியாபாரி கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி