விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

75பார்த்தது
விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் 94 பேர் புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், விஷச்சாராயம் விற்ற பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி