விஷச்சாராய விவகாரம்- நாளை கள்ளக்குறிச்சியில் இபிஎஸ் போராட்டம்!

61பார்த்தது
விஷச்சாராய விவகாரம்- நாளை கள்ளக்குறிச்சியில் இபிஎஸ் போராட்டம்!
கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஜூன் 24-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்தது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் நாளை நடைபெறும் போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். மேலும், சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.பி.உதயகுமாரும், போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

தொடர்புடைய செய்தி