சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

71பார்த்தது
சுற்றுலா சென்ற கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு
வேலூர் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் ஏலகிரி சுற்றுலா சென்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இருந்து ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் சுற்றுலை சென்றுள்ளனர். அப்போது, வேலூர் விமான நிலையம் அருகே அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த லாரி மீது மோதியதில் கல்லூரி மாணவி அஸ்வதி (21) உயிரிழந்தார். மேலும், இந்த கோர விபத்தில் மாணவி சக்தி(21), மாணவர் டிராவிட் (21) படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி