நூலிழையில் யானையிடமிருந்து தப்பித்த நபர்கள் (வீடியோ)

58பார்த்தது
கேரள மாநிலம் கோழிக்கோடு - மைசூர் நெடுஞ்சாலையில் உள்ள முத்தங்கா என்கிற இடத்தில் வாகன ஓட்டிகளை யானைகள் துரத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. சாலை ஓரம் யானைகள் நின்று கொண்டிருந்த நிலையில் இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்தவர்கள் முன்னேறிச் சென்றனர். அப்போது அவர்களை நோக்கி யானைகள் துரத்திக் கொண்டு வந்தது. இதனால் பயத்தில் நடுங்கிய வாகன ஓட்டிகள் வாகனத்தை தரையில் போட்டு விட்டு ஓடத் தொடங்கினர். இதனால் அவர்கள் யானையின் தாக்குதலிலிருந்து தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி