நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்- பிரியங்கா

73பார்த்தது
நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான்- பிரியங்கா
நீட் - UG வினாத்தாள் கசிவு, நீட் - PG ரத்து, யூஜூசி - நெட் ரத்து, சிஎஸ்ஐஆர் - ரத்து, நாட்டின் மிகப் பெரிய தேர்வுகளின் நிலை இதுதான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் அவர், "பா.ஜ.க ஆட்சியில், ஒட்டுமொத்த கல்வித்துறையும் மாஃபியா மற்றும் ஊழல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசால் ஒரு தேர்வைக்கூட நியாயமான முறையில் நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தடையாக பா.ஜ.க அரசு மாறியுள்ளது" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி