முதுநிலை நீட் ஒத்திவைப்பு: அமைச்சர் மா.சு கண்டனம்

79பார்த்தது
முதுநிலை நீட் ஒத்திவைப்பு: அமைச்சர் மா.சு கண்டனம்
முதுநிலை நீட் தேர்வு இன்று காலை தொடங்க இருந்த நிலையில் நேற்றிரவு 10.30 மணிக்கு திடீரென்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட கண்டன அறிக்கையில், "நீட் தேர்வு ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை எட்டாக் கனியாக மாற்றியுள்ளது. நீட் தேர்வை திடீரென ஒத்திவைத்ததால் நாடு முழுவதும் தேர்வு எழுதும் மாணவர்கள் அலைக்கழிக்கப்பட்டுள்ளனர்" என குற்றம்சாட்டி உள்ளார்.