இத்தாலி கேப்ரி பகுதியில் பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலாளியான லுங்கி லோ ரோஸா 1962-ல் தனக்குக் கிடைத்த இந்த ஓவியத்தை தனது வீட்டில் மாட்டிவைத்துள்ளார். சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் அது பிக்காஸோவின் ஓவியம் என அவரது மகன் கண்டுபிடித்துள்ளார். இந்த ஓவியத்தின் தற்போதைய மதிப்பு ரூ.50 கோடி எனப்படுகிறது ($6 மில்லியன்). பிக்காஸோ யார் என தெரியாததால் இதன் மதிப்பு குறித்து அவருக்கு தெரியவில்லை. தற்போது ஓவியத்தை பரிசோதனை செய்த மகனுக்கு விவரம் தெரியவந்துள்ளது.