லாலு பிரசாத் மகள் ரோகினி மீது வழக்குப்பதிவு

50பார்த்தது
ஆர்ஜேடி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பீகாரின் சரண் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவின் போது நடந்த முறைகேடுகள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சரண் தொகுதியில் பாஜக எம்.பி., ராஜீவ் பிரதாப் ரூதியை எதிர்த்து மகாகத்பந்தன் (இந்தியா) கூட்டணி சார்பில் ரோகினி போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி