9 மாதங்களுக்குப் பிறகு ராணுவ வீரர்கள் சடலங்கள் மீட்பு

64பார்த்தது
லடாக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி 38 பேர் கொண்ட ராணுவ வீரர்களின் பயணக் குழு பனிச்சரிவில் சிக்கியது. இந்த விபத்தில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில், ஒரு ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் ராகுல், கவுதம், தாக்கூர் ஆகிய 3 ராணுவ வீரர்களின் உடல்கள் பனியில் சிக்கிக் கொண்டன. காணாமல் போன 3 வீரர்களை தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு தற்போது மூன்று ராணுவ வீரர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி