அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு

81பார்த்தது
அதிமுக முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு ஒத்தி வைப்பு
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் மீது கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கில் முன் ஜாமீன் கோரி விஜய பாஸ்கர் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்த நிலையில் வழக்கு விசாரணை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று (ஜூன் 19) மீண்டும் மனு, விசாரணைக்கு வந்த போது நீதிபதி சண்முகசுந்தரம், 3வது முறையாக வழக்கு விசாரணையை ஜூன் 21க்கு ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி