நமது உணவில் அன்றாட பயன்படுத்தி வரும் ஒரு பொருள் உப்பு. இதனை, ஒரு நபர் ஒரு நாளைக்கு, பத்து கிராம் மட
்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது என மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. அதேபோல், வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், உப்பு அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு மோசமான நோய் ஏற்படும் என தெரிவித்துள்ளனர். உப்பை சிக்கனமாக பயன்படுத்துபவர்களை விட, அதிகமாக உப்பை உண்பவர்களுக்கு வயிற்றில் புற்றுநோய் வருவதற்கு 41 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.