10வது தேர்வு எழுதாமல் பாஸ் ஆன மாணவன்

75பார்த்தது
10வது தேர்வு எழுதாமல் பாஸ் ஆன மாணவன்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு டவுன் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள அரசு உயர் நிலை பள்ளியில், படித்துவரும் வைஷ்ணவி என்ற மாணவி அறிவியல் செய்முறை தேர்வு எழுதியுள்ளார். இதற்கு 25 மதிப்பெண்களும் மேலும் எழுத்து தேர்வில் 25 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், வைஷ்ணவி தேர்வு எழுதவில்லை ஆப்சென்ட் என பதிவாகியுள்ளது. இதனால் மாணவி தேர்வில் தோல்விடைந்துள்ளார். அதே நேரம் பள்ளிக்கு பல மாதங்களாக வராமல் இருந்த தருண் என்ற மாணவர் பாஸ் என வந்துள்ளது. இது குறித்த விசாரணையில் மதிப்பெண் மாற்றி பதிவேற்றப்பட்டுள்ளது என தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி