முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு அடி உதை

49638பார்த்தது
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு அடி உதை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் தேமுதிக பிரச்சார கூட்டம் நேற்று நடந்தது. அங்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பொதுமக்களிடம் விஜய பிரபாகரனுக்காக வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து சாத்தூர் பகுதிக்கு செல்ல புறப்பட்ட போது முன்னாள் இருந்த காரில் அமர்ந்திருந்த சாத்தூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனை அதிமுகவை சேர்ந்தவர்கள் சரமாரியாக் தாக்கினர். அவர்களிடமிருந்து ராஜவர்மன் உள்ளிட்டோர் காரில் தப்பி சென்றனர். அப்போதும் விடாமல் அவரின் கரை விரட்டியடித்து தாக்கினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

கடந்த 2021-ல் அதிமுகவில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், ராஜவர்மன் அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி