நடிகர் தர்ஷனின் மேலாளர் திடீர் தற்கொலை

70பார்த்தது
நடிகர் தர்ஷனின் மேலாளர் திடீர் தற்கொலை
ரேணுகாசாமி என்பவர் கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் அவரது காதலியும், நடிகையுமான பவித்ரா கவுடா ஆகியோர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், தற்போது தர்ஷனின் மேலாளர் ஸ்ரீதர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெங்களூருவில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனிமையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொள்வதாக தற்கொலைக் கடிதத்துடன் வீடியோவும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே தர்ஷனின் மேலாளர் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி