ஊசிமுனையில் அம்பாள் தவம் செய்த ஆடித்தபசு திருநாள் இன்று.!

67பார்த்தது
ஊசிமுனையில் அம்பாள் தவம் செய்த ஆடித்தபசு திருநாள் இன்று.!
ஹரியும், ஹரனும் ஒன்று என்பதை நிரூபிக்க அம்பிகை, சிவபெருமானை நோக்கி ஊசி முனையில் தவம் இருந்த ஆடித்தபசுத்திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் பௌர்ணமி அன்று ஆடித்தபசுத்திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சியளித்ததும், பின்னர் கோமதி அம்மன் சங்கரலிங்கரை மணந்த திருக்காட்சி வைபவங்களும், சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரங்களும் சங்கரன்கோவிலில் நடைபெறும்.

தொடர்புடைய செய்தி