போதை ஏற்ற வலி நிவாரண மாத்திரைகளை விற்ற இளைஞர்

64பார்த்தது
போதை ஏற்ற வலி நிவாரண மாத்திரைகளை விற்ற இளைஞர்
சென்னை எம்கேபி.நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போதைக்கு பயன்படுத்துவதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது குறித்த சோதனையில் கணேஷ் (31) என்பவரை கைது செய்தனர். அவருக்கு வில்லிவாக்கம் ரயில்வே கேட் அருகே ஒரு நபர் மாத்திரைகளை கொண்டுவந்து கொடுத்துள்ளார் என்று தெரிந்தது. இதையடுத்து போலீசார் கணேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டு மாத்திரைகள் சப்ளை செய்தவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி