காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி

79831பார்த்தது
காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே வெஞ்சாரமூட்டில் காட்டுப்பன்றிக்கு வைத்த மின்வேலியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளுமண்ணடியைச் சேர்ந்த உன்னி (35) என்பவர் இரவில் நண்பர்களுடன் ஆற்றில் இருந்து மீன் பிடித்துக் கொண்டு வரும் வழியில் மின்சாரம் பாய்ந்து பலியானார். மின் கம்பியில் உரசி சுருண்டு விழுந்த அவரை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி