மாலையில் உடற்பயிற்சி செய்வது உடல் நலத்திற்கு நல்லது என்று சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் மாலை நேர உடற்பயிற்சி செய்வதால் பலன் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை உடல் செயல்பாடுகளைச் செய்பவர்களுக்கு அகால மரணம் மற்றும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. நடப்பது, ஓடுவது, படிக்கட்டுகளில் ஏறுவது, வீட்டைச் சுத்தம் செய்வது நல்லது என்று கூறப்படுகிறது.