தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் கர்நாடக மாநிலம் சிமோகாவை சேர்ந்த ரெஜிமோன் (53) என்பவர் தொழில் ரீதியாக உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.68 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தல் முடிந்த நிலையில் ஆவணங்களை கொண்டு வந்து பணத்தை திரும்ப பெற வந்தார். அப்போது தனது இரு கைகளி லும் தங்க பிரேஸ்லெட், தங்கக் காப்பு, கழுத்தில் தங்கச்சங்கிலி என சுமார் 2 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து வந்தார். அவரை அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.