திடீரென மாயமான செல்போன்.. சிசிடிவியில் சிக்கிய நபர்

64பார்த்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் சதீஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த 50 வயதுடைய நபர் ஒருவர், செல்போனை சோதனை செய்ய கொடுத்துள்ளார். தொடர்ந்து சந்தேகம் கேட்பது போல நடித்து, அங்கிருந்த செல்போனை திருடிவிட்டு, நைசாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார். கடையில் பணியாற்றிய நபர் தனது செல்போன்‌ மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் சிசிடிவியை ஆய்வு செய்தார். அதில், செல்போனை திருடி சென்றது தெரியவந்தது.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி