தனது எஜமானருக்கு போட்டியாக எடப்பாடி பழனிசாமியும் பொய்களை சொல்லி வருகிறார்
தான் கொடுத்த அழுத்தத்தால் 1,000 ரூபாயை திமுக தருவதாக இபிஎஸ் பொய் பேசி வருகிறார்; ரூ1,000 உரிமைத் தொகையை முதல்வர் ஸ்டாலின் தந்தார் என்றே மக்கள் சொல்வார்கள். மேலும் கவுண்டமணி படத்தில் வரும் வசனத்தை நினைவுபடுத்தி ஒரு மனுஷன் பொய் பேசலாம், ஆனா ஏக்கர் கணக்கா பேசக் கூடாது என விழுப்புரத்தில் நடந்துவரும் தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.