அரசு அதிகாரி எட்டி உதைத்ததில் லாரி மோதி ஒருவர் பலி

62பார்த்தது
அரசு அதிகாரி எட்டி உதைத்ததில் லாரி மோதி ஒருவர் பலி
தெலங்கானா மாநிலத்தில் சிக்கனல்களில் நிற்கும் கார்களின் கண்ணாடியை சுத்தம் செய்து தனது வாழ்க்கையை சிவராம் என்ற நபர் நடத்திக்கொண்டிருந்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை பீம்கல் துணை தாசில்தார் ராஜசேகர் பயணித்த காரை, அவர் சொல்லாமலே சிவராம் சுத்தம் செய்துள்ளார். பின்னர் அதற்கு பணம் கேட்டுள்ளார் சிவராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சிவராமை ராஜசேகர் எட்டி உதைத்துள்ளார். இதனால் நிலைதடுமாறி அவ்வழியே வந்த டிப்பர் லாரி மீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் இது விபத்து என நினைத்த போலீசார். சிசிடிவி காட்சிகளின் அடைப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி