பாட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - 5 பேர் பலி

69பார்த்தது
உத்தரப் பிரதேசத்தில் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள பர்வாரி நகரில் பட்டாசு ஆலை ஒன்றில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்தினால் அப்பகுதியை கடும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. பட்டாசு ஆலை மொத்தமாக வெடித்து சிதறிய நிலையில் தீயணைப்பு துறையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி