டிப்பர் லாரி மீது மோதிய அரசு பஸ்.. 10 பேர் படுகாயம்

53பார்த்தது
டிப்பர் லாரி மீது மோதிய அரசு பஸ்.. 10 பேர் படுகாயம்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக வீரசோழனுக்கு சென்ற அரசு பஸ் சென்றுள்ளது. அப்போது முன்னால் சென்ற டிப்பர் லாரி டிரைவர் சாலையின் குறுக்கே டூவீலர் சென்றதால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது பின்னால் வந்த அரசு பஸ், டிப்பர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பஸ்ஸின் முன் பகுதியில் அமர்ந்திருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 2 பேர் சிறிய காயமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி