மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்

51பார்த்தது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நினைவு ஊர்வலம் நாளை வியாழக்கிழமை நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மாலை 4 மணி அளவில் கோஹினூர் திரையரங்கம் அருகில் இருந்து அமைச்சர் கே.என். நேரு தலைமையில் புறப்பட்டு தென்னுர் உழவர் சந்தை அருகில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடம் சென்றடைந்து வீரவணக்கம் செலுத்தப்படும். அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம் கலைஞர் நகர் பகுதி கழகத்தின் சார்பில் கல்லுக்குழி பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் சாலையில் மாலை 6 மணிக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெறுகின்றது.

தொடர்புடைய செய்தி