மகாராஷ்டிரா மாநிலம் பண்டாரா - கோண்டியா நெடுஞ்சாலையில் புலி மீது கார் மோதியதில், புலி பலத்த காயமடைந்தது. வலியால் துடித்துக் கொண்டிருந்த புலி பின்னர் அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், புலியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே புலி பரிதாபமாக இறந்தது. இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும் வாகன ஓட்டிகள் வனப்பதியில் மிக கவனத்துடன் வாகனங்களை ஓட்ட வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.