காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்!

58835பார்த்தது
காங்கிரசுக்கு பெரும் அதிர்ச்சி.. கட்சி தாவும் 15 எம்எல்ஏக்கள்!
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள நிலையில், மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 15 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, பாபா சித்திக் மற்றும் அவரது மகன் ஜீஷான் சித்திக் ஆகியோர் தேர்தலுக்கு முன்பாக அஜித் பவார் தலைமையிலான என்சிபி அணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி