திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (26), இவர் விஜயலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 5 மாத கர்ப்பமாக இருந்த விஜயலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன் மர்ம காய்ச்சலால் உயிரிழந்து விட்டார். இதனால் மிகுந்த மன வேதனையில் இருந்த யோகேஸ்வரன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.