திமுக - மதிமுக பேச்சுவார்த்தை நிறைவு

76பார்த்தது
திமுக - மதிமுக பேச்சுவார்த்தை நிறைவு
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, இன்று மதிமுக நிர்வாகிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூடுதல் தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் நேரடியாக போட்டியிடவும் விருப்பம் தெரிவித்துள்ளது. அதில், விருதுநகர், ஈரோடு, திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட அக்கட்சி விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் முடிந்து திரும்பியதும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் இறுதி செய்யப்படும்.

தொடர்புடைய செய்தி