ஜனநாயக கடமையாற்றிவிட்டு 95 வயது மூதாட்டி உயிரிழப்பு

85பார்த்தது
ஜனநாயக கடமையாற்றிவிட்டு 95 வயது மூதாட்டி உயிரிழப்பு
மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில் வசித்து வந்த மூதாட்டி காயத்ரி முகர்ஜி (வயது 95). செராம்பூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஹவுரா நகரில் ஜெகத்பல்லவ்பூர் பகுதியை சேர்ந்த பதிஹால் என்ற இடத்தில் வசித்து வந்திருக்கிறார். மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் (மே 17) காயத்ரி வாக்களிக்க தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது. இதனையடுத்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 8-வது நிமிடம் காயத்திரி முகர்ஜி உயிரிழந்துவிட்டார். இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி