சடலமாக மீட்கப்பட்ட 5 மாத சிசு

3614பார்த்தது
சடலமாக மீட்கப்பட்ட 5 மாத சிசு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, பிரசவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் தொப்புள் கொடியுடன் ஆன் குழந்தை ஒன்று சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது கை கால்கள் அசைவற்ற நிலையில் குழந்தையின் சடலம் கிடந்துள்ளது. உடனடியாக இது குறித்து ராசிபுரம் காவல்துறையினருக்கும், அரசு மருத்துவமனைக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதபரிசோதனை முடிவில் 5 மாத சிசுவை கலைக்க முயன்றுள்ளனர். அப்போது இறந்து பிறந்த குழந்தையை வீசிவிட்டு சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி