ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

572பார்த்தது
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
முக்கியத் துறைகளை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண் துறை ஆணையர் எல்.சுப்ரமணியன், தமிழ் வளர்ச்சித்துறை செயலாளராக பணியிட மாற்றம். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், சமூக நலத்துறை செயலாளராக மாற்றம். மீன்வளத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக நியமனம். நில நிர்வாகத்துறை ஆணையர் எஸ். நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலராக நியமனம். சமூக நலத்துறை முதன்மை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி