15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

564பார்த்தது
15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
டெல்லியின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கபஷேராவை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மேலும் இரண்டு சிறுவர்கள் இருந்துள்ளனர். அப்போது சிறுமி அந்த மூவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அந்த மூன்று சிறுவர்களும் இணைந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து வெளியே சொன்னால் கடுமையான விளைவுகளை சந்திப்பாய் என எச்சரித்துள்ளனர். சிறுமி இதுகுறித்து அவரின் பெற்றோரிடம் கூறியதையடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி