தென்காசி மாவட்டத்தில் 6 நாட்கள் ஊரடங்கு

58பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் 6 நாட்கள் ஊரடங்கு
பூலித்தேவன் பிறந்தநாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் ஆகிய நிகழ்ச்சியையொட்டி தென்காசி மாவட்டத்தில் 6 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். இன்று மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆகஸ்ட் 30 மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2 காலை 10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி