ஜப்பானின் டோக்கியோ விமான நிலைய நின்றிருந்த கடலோர காவல்படை விமானத்தில் பயணிகள் விமானம் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்தில் கடலோர காவல்படை விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடலோர காவல்படை விமானத்தின் கேப்டன் மீட்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பயணிகள் விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். விபத்தில் பயணிகள் விமானத்தின் பின்பக்க பகுதியில் பிடித்த தீ மளமளவென எரிந்ததால் முழுமையாக சேதம் அடைந்தது.