3 இடங்களில் சதமடித்த வெயில்

54பார்த்தது
3 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. நேற்றைய தினம் தமிழ்நாட்டில் 3 இடங்களில் வெயிலானது சதம் அடித்து இருந்து நிலையில் இன்றைய தினமும் தமிழ்நாட்டில் 3 இடங்களில் வெயிலானது சதம் அடித்து உள்ளது. இன்றைய தினத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் 100.76°F வெப்பம் பதிவாகி உள்ளது. மேலும் கரூர் பரமத்தியில் 100.4°F வெப்பமானது பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி