கூட்டம் இல்லாமல் நடந்த பிரதமர் மோடியின் பேரணி!

1062பார்த்தது
தமிழ்நாட்டில் முதல்முறையாக பிரதமர் மோடி பங்கேற்ற பாஜகவின் ரோடு ஷோவில் பெருமளவில் மக்கள் கூட்டம் கூடாததால் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோவையில் 2.5 கி.மீ தூரம் வரை நடைபெற்ற பேரணியில் கூட்டம் இருப்பதை போல் காட்டிக் கொள்வதற்காக, இரு பக்கமும் பாஜக தொண்டர்கள் பிரதமர் மோடியின் வாகனத்தை பின்தொடர்ந்து ஓடும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதனை கண்ட நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி