ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை

79பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூர கொலை
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று (ஜூலை 3) ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், பன்வாரி தேவி (65) என்பவரை கோடரியால் வெட்டிக் கொன்றனர். அவரது இரண்டு பேரன்களையும் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலங்களை மீட்டு, கொலைக்காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி