சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்!

11223பார்த்தது
சேற்றில் சிக்கி உயிரிழந்த 2 இளைஞர்கள்!
ஈமச் சடங்கிற்கு வந்த இரு இளைஞர்கள் தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஜடையம்பட்டி கிராமத்திற்கு உறவினரின் ஈமச்சடங்கிற்காக முரளிதரன் என்பவரது இளைய மகன் ஜெயராஜ் (22), பாலகிருஷ்ணன் என்பவரது மகன் கார்த்திகேயன் (23) ஆகியோர் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயராஜ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரின் கால்களும் சேற்றில் சிக்கி ஆற்றில் மூழ்கி மூச்சடைத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாரூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி