வடக்கு காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டம் உரியில் உள்ள கோலான் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். இதனிடையே உரி செக்டாரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.