'முக்யமந்திரி மஜ்ஹி லட்கி பஹின் யோஜனா (எம்எம்எல்பிஒய்)' என்ற திட்டத்தை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேற்று (ஆகஸ்ட் 17) அறிமுகப்படுத்தினார். இதன் கீழ் தகுதியான பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். வரவிருக்கும் மராட்டிய சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆளும் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டால், மாதாந்திர தொகையை ரூ.1,500-லிருந்து ரூ.3,000 ஆக இரட்டிப்பாக்குவேன் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.